பீதியில் உயிரை விட்ட கொரோனா நோயாளி., சென்னையில் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்றுமுதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பட்டு வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக முகக்கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் 500 ரூபாயும் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையின் 3வது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த 51 வயது உடைய ஒருவர் கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அவர் அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chnnai corona affected man suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->