பெண்களை ஏமாற்றிய காமுகன் விவகாரத்தில் திருப்பம்.. பிரபல பாடகி பகீர் ட்விட்..!!
Chinmayi twit about kanniyakumari girl abused case culprit kasi
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் காசி. இவரது தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வரும் நிலையில், தந்தையின் வியாபாரத்தில் தனது உடலை வளர்த்து வந்த காமுகனின் எண்ணத்தால் முகநூலில் போலி கணக்கு துவங்கி, பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளான்.
சமூக வலைத்தளத்தில் தன்னை சமூக ஆர்வலராகவும், தொழில் அதிபராகும், ரோமியோகவும் அடையாளப்படுத்தி, கோட் சூட் புகைப்படத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு, இவனது புகைப்படத்தை பார்த்து மயங்கிய பெண்களிடம், பல கவிதைகளை பேசி மனதை கவர்ந்து உள்ளான்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவனிடம் ஏமார்ந்து பல லட்சக்கணக்கான பணம் மற்றும் காரையும் பறிகொடுத்துள்ளார். பெண் மருத்துவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் இவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முகநூல் வாயிலாக பல பெண்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. சிறுமிகள், பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களை இவன் சீரழித்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவன் பொள்ளாச்சி கும்பலுக்கு வக்காலத்து வாங்கியவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரபல பாடகி சின்மயி இவன் தொடர்பாக முதலிலேயே எச்சரித்ததாகவும், தற்போது இவன் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chinmayi twit about kanniyakumari girl abused case culprit kasi