தலையில் பாத்திரத்தை சிக்கவிட்டு குய்யோ, முய்யோவென அலறித்துடித்த சிறுவன்... இலாவகமாக மீட்ட தீயணைப்பு படையினர்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடியை அடுத்துள்ள கோவில்பதாகை அசோக் நகர் பகுதியை சார்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னையில் இருக்கும் பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பெயர் திவ்யன் (வயது 3). திவ்யன் நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென சில்வர் பானையை தனது தலையில் எடுத்து மாட்டியுள்ளான். 

இதில் சிறுவனின் தலை பானைக்குள் சிக்கியதை அடுத்து, சிறுவன் தலையை வெளியே எடுக்க தெரியாது அலறித்துடித்துள்ளான். குழந்தையின் அலறலைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் விரைந்து வந்து பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. பானைக்குள் இருந்து சிறுவனின் தலையை வெளியே எடுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனில்லாமல் போனதை படுத்து, குழந்தையும் பயத்தில் அழுது துடித்துள்ளான். 

இதனால் பயந்துபோன பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி தீயணைப்பு படையினர் சில்வர் பானையில் எண்ணெய்யை தடவி சிறிது போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பாக தலையை வெளியே எடுத்துள்ளனர். இதனையடுத்து தாய், தந்தையை கண்ணால் கண்டதும் குழந்தை அழுகையை நிறுத்தவே, குடும்பத்தினரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child head struggled in pot later rescue team removed safely in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->