ஆசையாக கொண்டு வந்த மரப்பெட்டி! வேலையிலிருந்து வந்து திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த கொலைநடுங்கவைக்கும் பேரதிர்ச்சி!!
child dead inside the box while playing
சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் திருப்பதி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 8 வயது மகளும், சாருலதா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில் திருப்பதி,புவனேஸ்வரி இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் விளையாடிக்கொண்டிருக்கையில் வீட்டிலிருந்த மரப்பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர். அப்பொழுது மரப்பெட்டி அசைந்ததில் அது தானாக மூடிக்கொண்டது.
மேலும் சிறுமிகள் இருவரும் அலறியுள்ளனர். ஆனால் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இந்நிலையில் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த தாய் புவனேஸ்வரி, குழந்தைகளை காணவில்லை என வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் சந்தேகமடைந்து மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது குழந்தைகள் இருவரும் மயங்கி நிலையில் இருந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மூத்த மகள் தனுஸ்ரீ இறந்துவிட்டார்,மேலும் இரண்டாவது மகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மரப்பெட்டிக்குள் குழந்தைகள் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தனுஸ்ரீ மூச்சுத்திணறி பலியாகிவிட்டார். என கூறியுள்ளனர்.
மேலும் தான் கொண்டுவந்த மரப்பெட்டியாலே தனது குழந்தையை இழந்த தாய் புவனேஸ்வரி கதறி அழுதுள்ளார்.
English Summary
child dead inside the box while playing