காதல் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் இரண்டாவது திருமணம் செய்தவருக்கு இறுதியில் நடந்த சோகம்!! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் பவானி என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு  2குழந்தைகளுடன் கொடுங்கையூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷை விட்டு பிரிந்த மனைவி பவானி. இதையயடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, புழல் கண்ணப்பசாமி நகரில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் தனது நான்கு வயது மகள் யாழினிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி, தனியார் மருத்துவமனைக்கு பவானி கொண்டுச் சென்றுள்ளார். மருத்துவமனையில் குழ்நதையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்த முதல் கணவர் ரமேஷ் தனது குழந்தையின் முதுகு, கழுத்து, மற்றும் வயிறு பகுதிகளில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பவானியின் இரண்டவாது  கணவர் ஆசிபை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் நான்கு வயது குழந்தை யாழினியை உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு, கன்னம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும்  குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும் கொலை செய்ததாக  ஆசிப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ஆசிப் மீது ஏற்கனவே மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி ,கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஆசிப் மீது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் அடித்து துன்புறுத்துவது மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child abuse in vyasarpadi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->