திட்டக்குடி அருகே, சிறுமியை கடத்தி கணவனுக்கு கொடுத்த லேடிஸ் புள்ளிங்கோ..!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இருக்கும் திட்டக்குடி அருகே ஆண் குழந்தை பெற வேண்டுமென 16 வயது சிறுமியை கடத்திச் சென்று தன்னுடைய கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து இருக்கும் மனைவி மற்றும் கணவன் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துரையினர் கைது செய்துள்ளனர். 

திட்டக்குடி அருகே இருக்கும் வையங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆண் வாரிசு வேண்டும் என தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி ஒருவரை கடத்தி செல்லக்கிளியே தன்னுடைய கணவருக்கு திருமணம் செய்துள்ளார். 

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், உடனடியாக சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், தீவிரமாக தேடியதில் அசோக் குமார், செல்லக்கிளி ஆகியோர் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அசோக்குமார் மற்றும் செல்லக்கிளி மீது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, சீரழித்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHILD ABUSE IN TITTAGUDI VAIYANGUDI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->