#Breaking: நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை ரத்து... உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அதிரடி அறிவிப்பு..!!
Chief Registrar announce summer court leave cancelled due to covid 19 amid
கோடை விடுமுறையை நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள நீதிமன்றங்கள் அனைத்திற்கும் கோடை விடுமுறை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை சென்னை உயர்நீதிமன்ற கிளையின் கோடை கால விடுமுறை இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கரோனாவின் தாக்கத்தால் வழக்குகள் நிலுவையின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றங்கள் என அனைத்து நீதிமன்றங்களின் கோடைகால விடுமுறை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chief Registrar announce summer court leave cancelled due to covid 19 amid