தமிழகம் | ஒரு அடியில் வாழைத்தார் தள்ளிய கோழிக்கூடு வாழை மரம்..!
chicken coop banana tree surprised people
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் வயது 28. இவர் ஒரு விவசாயி.
அப்பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய ரக கோழிக்கூடு வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது.
பொதுவாக வாழை என்றால் மேல் பகுதியில் குலைகள் தள்ளும். ஆனால் இங்கு பயிரிடப்பட்டுள்ள ஒரு வாழையில் மட்டும் அடிப்பகுதியில் 1 அடி உயரத்தில் குலை தள்ளி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chicken coop banana tree surprised people