வாடகை கேட்டதற்கு வீட்டின் உரிமையாளர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிஜூ கான்.. வெளுத்துவிட்ட பொதுமக்கள்.!
Chennai15 Aged Child Girl Sexual Tortured Police Investigation 13 July 2021
வீட்டு வாடகைப்பணம் கேட்ட உரிமையாளரின் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகனை பொதுமக்கள் அடித்து நொறுக்கி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சென்னையில் உள்ள வாடகை வசித்து வந்தவன் நிஜு கான். இவன் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு பல மாதமாக பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், தினமும் ஆடம்பர செலவுகளை தவறாது செய்துவிடுவான் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பல மாதமாக அமைதியாக இருந்த வீட்டின் உரிமையாளர், நிஜு கானிடம் வாடகைப்பணம் கேட்டு இருக்கிறார். தற்போது பணம் இல்லை என்று நிஜு கான் கூறவே, உரிமையாளருக்கும் - நிஜு கானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பழி வாங்கும் பொருட்டும், வீட்டு வாடகையை கொடுக்காமல் இருப்பதற்கும் காமுகன் நிஜு கான், வீட்டு உரிமையாளரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது தந்தையிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிஜு கான் தப்பி சென்றுள்ளான். அவனை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான வீட்டின் உரிமையாளரும் தேடி வந்துள்ளார்.
நிஜு கான் அப்பகுதியில் உள்ள பக்கத்து தெருவில் பதுங்கியிருந்து உறுதியாகவே, சிறுமியின் தந்தை அப்பகுதி பொதுமக்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று நிஜு கானை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிஜு கானை கைது செய்து அழைத்து சென்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai15 Aged Child Girl Sexual Tortured Police Investigation 13 July 2021