சகோதரத்துவத்துடன் சிரித்த காதலி... சந்தேக நோயால் விபரீத முடிவெடுத்த காதலன்.!!
Chennai youngster suicide due to doubt
சென்னையில் உள்ள மணாலி துர்கை நகர் பகுதியை சார்ந்தவர் நடராஜன் (வயது 21). இவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நிலையில், நேற்று முன்தினத்தில் வீட்டில் வழக்கம்போல தூங்க சென்றார்.
பின்னர் காலை நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வராமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்த பெற்றோர்கள் அறையின் கதவை திறந்து பார்க்கையில், நடராஜன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது குறித்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில், நடராஜன் தன்னுடன் பயின்று வரும் மாணவியை காதலித்து வந்த நிலையில், இந்த பெண்மணி சகோதரத்துவத்துடன் மற்றொரு நபரிடம் சிறிது பேசியுள்ளார்.
இதனைக்கண்ட நடராஜன் பெண்மணியின் மீது சந்தேகமுற்று, மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai youngster suicide due to doubt