மதுபோதைக்கு சானிடைசரை குடித்த இளைஞர்கள்... மருத்துவமனையில் உயிர் ஊசல்.!!
chennai youngster drink hand sanitizer treatment in hospital risky stage
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கரோனா வைரஸின் தாக்கத்தால், நாடுதழுவிய ஊரடங்கு அமலாகியுள்ளது. தினமும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற பணிகளுக்கு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், குடிமகன்கள் மதுபானம் அருந்த வழி தெரியாது பல மாற்று பானங்களை திருட்டுத்தனமாக வாங்கி அருந்தி வருகின்றனர். இதனால் கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுவிற்கு மாற்றாக சானிடைசரை அருந்தும் பழக்கம் அறிமுகமாகி, இளைஞர்கள் பலியாகும் சோகம் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள இராயப்பேட்டை பகுதியை சார்ந்த நண்பர்கள் ராஜ்குமார் மற்றும் தமிழ்மணி.
இவர்கள் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்த நிலையில், கடந்த ஒருமாதமாக ஊரடங்கால் மது அருந்தாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கிருமி நாசினியான சானிடைசரில் நீரை கலந்து குடித்த இருவரும் உயிருக்கு போராடியுள்ளனர்.
இதனையடுத்து இவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இருவரும் அதிகளவு சானிடைசரை அருந்தியுள்ளனர் என்று கூறினர். மேலும், இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
chennai youngster drink hand sanitizer treatment in hospital risky stage