ஒருதலைக்காதல்... தாய் தந்தையரின் பாசத்தை மறைத்து அரங்கேறிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள மணலி துர்க்கை அவென்யூ பகுதியை சேர்ந்த இளைஞர் நடராஜன் (வயது 21). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதன் பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நடராஜன் பயன்படுத்திய ஸ்மார்ட்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் காதல் பிரச்சினையால் நடராஜன் தற்கொலை முடிவு செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், நடராஜன் படித்து வரும் கல்லூரியில், பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததும், அந்த பெண் வேறு மாணவரிடம் சிரித்து பேசி பழகியதை கண்டு நடராஜன் ஆத்திரத்தில் சத்தம்போட்டு உள்ளதும் தெரியவந்தது.  

நடராஜனின் செயலால் பெண் பேசுவதை நிறுத்தி கொண்டதாகவும் தெரியவருகிறது, மேலும், அந்த பெண்ணை சமாதானப்படுத்துவதற்காக ஏராளமான வாட்ஸப் குரல் பதிவுகளும், குறுந்தகவல் அனுப்பி உள்ள நிலையில், மாணவி சமாதானம் அடையாததால் இந்த இறுதி முடிவு எடுத்துக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதுமட்டுமல்லாது தனது அன்பையும், பாசத்தையும், பெரும் பணத்தையும் லட்சக் கணக்கில் கொட்டி கல்லூரியில் படிக்க வைத்த பெற்றோரை ஒரு கணம் கூட நினைத்துப் பார்க்காமல், மாணவி தன்னுடன் பேச மறுத்த காரணத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞரின் செயல் கோழைத்தனமானது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். படிக்கும் வயதில் பருவத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளை கடந்து வந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடையாளம் என்றும் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai youngster attempt suicide one side love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->