பாலியல் தொல்லை... பெண்ணின் கன்னத்தை கடித்து கொடுமை செய்த கிழட்டு காமுகன்.. சென்னையில் பேரதிர்ச்சி.!
Chennai woman Sexual Torture by TNEB Worker Age 50
சென்னையில் உள்ள அமைந்தகரை இருளாண்டி காலனி பகுதியை சார்ந்த மின்வாரிய ஊழியரின் மீது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்மணி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், " எனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 50 வயது மின்வாரிய ஊழியருக்கு மனைவி மற்றும் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
மதுபோதைக்கு அடிமையாகிய கொடூரன், என் மீது மோகம் கொண்டுள்ளான். கணவரை இழந்து வாழ்ந்து வந்த என்னை காம இச்சையை தீர்க்க வருமாறு ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறான். அவனது இச்சைக்கு இணங்க நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை தினத்தில் இரவு 7 மணியளவில் தனிமையில் இருந்த என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். போதையில் இருந்த காமுகன், என்னை கட்டிக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தான். நான் அவனை தள்ளிவிட்டு வீட்டினை விட்டு வெளியே வந்தேன். விரட்டி வந்த கொடூரன் எனது கன்னத்தை கடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இதனால் காயமடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளேன். காமுகனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai woman Sexual Torture by TNEB Worker Age 50