48 மணிநேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் திருவள்ளூர் தாமரை பாக்கத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி பந்தலூரில் 9 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி, கரூர் பாலவிடுதி பகுதிகளில் தலா 8 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், புதுக்கோட்டையில் ஏழு செண்டி மீட்டர் மழையும், அயனாவரம், திருவள்ளூர், பொன்னேரி, ராணிப்பேட்டை அரக்கோணம், திருச்சி துவாக்குடி, கோவை வால்பாறை பகுதிகளில் ஆறு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை மன்னார் வளைகுடா, அந்தமான் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல், கடலோர கேரள, கர்நாடக லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், கடலோர லட்சத் தீவு பகுதி, தெற்கு குஜராத், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், இப்பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 50 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai weather report announced rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->