8 மாவட்டத்தில் மழை.. 3 மாவட்டத்தில் கனமழை.. நீங்க இந்த மாவட்டமா?.. இன்னைக்கி செம்ம மழை இருக்கு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். 

வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. 

தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் காவேரிப்பாக்கம், ஏற்காட்டில் தலா ஏழு செண்டி மீட்டர் மழையும், விழுப்புரத்தில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆலங்காயம், தாமரைப்பாக்கம் பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழையும், ஊத்தங்கரை, போளூரில் 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் சேலம், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், கடலோர கேரள, கர்நாடக, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், இதனால் இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Weather report announced rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->