நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! 8 மாவட்டங்களில் அனல் காற்று எச்சரிக்கை.!! அதிரடி அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம்.!!
chennai weather report announce to rain and heat wave
கேரளா மாநிலத்தில் கடந்த எட்டாம் தேதியன்று தென்மேற்கு பருவமழை ஆனது துவங்கியது. சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் வழக்கத்தை விட தாமதமாக தொடங்கிய இந்த பருவ மழை., கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது.
இந்த புயலுக்கு வாயு என்று பெயர் சூட்டப்பட்டு., இந்த புயல் குஜராத் மாநிலத்தை இன்று கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. கேரள மாநிலத்தை பொருத்த வரையில் தென்மேற்கு பருவமழை ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில்., தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் வரும் இரண்டு நாட்களுக்கு பின்னர் வெயில் குறையலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது., தற்போது உருவாகியுள்ள வாயு புயல் கேரள மாநிலத்தின் அரபிக்கடல் பகுதியில் இருந்து., குஜராத்தை நோக்கி பயணித்து இன்று பிற்பகலுக்குள் கரையை கடக்கவுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கன்னியாகுமரி., தேனி., திருநெல்வேலி., கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம் என்றும்., ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாது தமிழகத்தின் திருவள்ளூர்., சென்னை., வேலூர்., விழுப்புரம்., காஞ்சிபுரம்., திருவண்ணாமலை., கடலூர்., திருச்சி., பெரம்பலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு கடுமையான காற்று வீசக்கூடும்.
உள் மாவட்டத்தில் 2 டிகிரி செல்ஸியஸ் வரை வெயிலின் தாக்கமானது அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்., இன்று காலை உடன் 24 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில் குளச்சலில் 4 செ. மீ மழையளவும்., நாகர்கோவில்., நடுவட்டம் மற்றும் ஊட்டியில் 3 செ.மீ மழையளவும்., இரணியல்., குழித்துறை., பெரியார்., பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் இரண்டு செ.மீ மழையளவும் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
chennai weather report announce to rain and heat wave