வானிலை மையத்தின் உற்சாக அறிவிப்பு.. சூறைக்காற்றுடன் புரட்டி எடுக்கும் மழை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தலைநகர் சென்னையை பொருத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நீலகிரி மாவட்டம் தேவலாவில் 4 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூலை 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, குஜராத் கடலோர பகுதி, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 50 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள புறநகர் பகுதிகளான போரூர், பூந்தமல்லி பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai weather report announce Rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->