அரபிக்கடலில் புயல் வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!
Chennai weather report announce
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையனானது உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் புயலாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் மூலமாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக அதிகளவு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் புயலாக வலுவடைந்து பின்னர், மேற்கு கடற்கரை திசையை ஒட்டி நகர வாய்ப்புகள் இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை ஜூன் ஒன்றாம் தேதி என்று துவங்குகிறது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 48 மணி நேரத்திற்கு தென்தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் சேலம் மாவட்டம் கீரனூரில் ஏழு செண்டி மீட்டர், கோவை மாவட்டம் வால்பாறை, வேலூர் மாவட்டம் அலங்காயம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், கிருஷ்ணகிரியில் உள்ள சூலூரில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பகுதியானது உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு, மத்திய மேற்கு, மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு வரும் 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம்.
இதனால் ஜூன் 4-ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai weather report announce