#JustIN: வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து 3 ரவுடி கைதிகள் தப்பியோட்டம் - காவல்துறை வலைவீச்சு.!
Chennai Vyasarpadi Rowdy Culprits Escaped from Police Station 30 May 2021
சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து, நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து செல்கையில் கைதிகள் தப்பி ஓடியுள்ளார். காவல் அதிகாரிகளை தாக்கிவிட்டு கிட்டா அஜித், அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் ஆகியோர் தப்பி சென்றுள்ளனர்.
ரவுடிக்குமபலை சார்ந்த 3 பேரையும் காவல் துறையினர், மற்றொரு வழக்கின் கீழ் விசாரணை செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வைத்துள்ளனர். இன்று காலை சுமார் 9 மணியளவில் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்த குற்றவாளிகள் கிட்டா அஜித், அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து, காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Vyasarpadi Rowdy Culprits Escaped from Police Station 30 May 2021