திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தீப்பிடித்து எரிந்த மின்சார பெட்டிகள்.. மணமகள் மயக்கம், மணமகன் தந்தைக்கு நெஞ்சுவலி.!
Chennai Vyasarpadi Marriage Reception Power Issue Relations Protest
வியாசர்பாடியில் அமைந்திருக்கும் திருமண மண்டபத்தில் மின்கசிவு காரணமாக மின்சார பெட்டிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் பரபரப்பு சூழல் ஏற்படவே, மின்னிணைப்பு 2 மணிநேரமாகியும் சரி செய்யப்படாத காரணத்தால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், மின்சார பெட்டிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறி இருக்கிறது.
இதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் பயத்துடன் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனைத்தொடர்ந்து, மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு அதனை சரி செய்ய மணமக்கள் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இரண்டு மணிநேரம் ஆகியும் அது சரி செய்யப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற உறவினர்கள், வியாசர்பாடி - மூலக்கடை சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்போது, மணமகனின் தந்தைக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட, மணமகளும் மயங்கி விழுந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மணமக்கள் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு இருதரப்பும் சென்றது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Vyasarpadi Marriage Reception Power Issue Relations Protest