3 கைதிகள் தப்பிய விவகாரம்.. 3 பேரும் கைது., ஒருவனுக்கு கால்களில் மாவுக்கட்டு.!!
Chennai Vyasarpadi 3 Culprits Escaped form Police Station Issue 3 Are Arrested 1 June 2021
சென்னையில் உள்ள வியாசர்பாடி திருமூர்த்தி நகர் அசோக் பில்லர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இதன்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வியாசர்பாடி பகுதி ரவுடிகளான அஜித் குமார் என்ற இட்டா அஜித் (வயது 24), ஜெகதீஸ்வரன் (வயது 21), அஜய் புத்தா (வயது 26) ஆகிய 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மூவரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், 3 பேரின் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த ரவுடிகளின் உறவினர்கள் மறுநாள் காலையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில், மூன்று பேரும் திட்டமிட்டு தங்களை தாங்களே தாக்கிக்கொண்ட நிலையில், சண்டையை காவல் துறையினர் விலக்கிவிட முயற்சி செய்ய சிறை கதவுகளை திறக்கையில் அங்கிருந்த காவல் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, மூவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று பெரம்பூர் இரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ஜெகதீஸ்வரனை காவல் துறையினர் கைது செய்த நிலையில், அஜய் புத்தா நான் காவல் துறையினரிடம் சரணடைந்து விடுகிறேன் என்று வீடியோ வெளியிட்டான்.
இதனையடுத்து, சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளுடன் உதவியுடன் அவனை கைது செய்த நிலையில், அவன் ஏற்கனவே தப்பி செல்ல முயற்சித்த போது பாலத்தில் இருந்து விழுந்து காயம்பட்டதால் தானாக முன்வந்து சரணடைந்துள்ளான்.
அவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான அஜித் குமாரை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில், அவனையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Vyasarpadi 3 Culprits Escaped form Police Station Issue 3 Are Arrested 1 June 2021