நல்லவன் போல நடித்து, சிறுமிக்கு எமனாக மாறிய காமுக கொடூரன்.. சிறுமி தற்கொலை வழக்கில் பேரதிர்ச்சி திருப்பம்.!
CHENNAI VELACHERY 13 YEAR CHILD SUICIDE POLICE DISCOVERED SUICIDE MYSTERY
சென்னையில் உள்ள வேளச்சேரி காந்தி நகர் பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் குடும்பத்தினர் மற்றும் தோழிகளுக்கு தெரியாத நிலையில், சிறுமியின் தாயார் அலைபேசியை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான வகையில் குறுந்தகவல் ஒன்று இருந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில், " உன் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவேன் " என்ற தகவல் இருந்துள்ளது. இந்த குறுந்தகவல் சிறுமி தற்கொலை செய்துகொண்ட தினத்தினை ஒத்துப்போனதால், காவல் துறையினர் இதனை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் மீட்பிற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிறுமியின் அலைபேசியும் அனுப்பப்பட்டுள்ளது. இதில், அந்த குறுஞ்செய்தியை அனுப்பிய நபர், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 33 வயது குணசீலன் என்பது தெரியவந்துள்ளது.
இவரை தரமணி காவல் துறையினர் பிடித்து விசாரிக்கையில், நான் எந்த ஒரு தகவலையும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர், குணசீலனின் அலைபேசியை சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய குறுஞ்செய்தி மற்றும் சிறுமியுடன் குணசீலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் ஆபாச விடியோக்கள் இருந்துள்ளது.
இது குறித்த விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் பெற்றோர் இருவருமே பணிக்கு சென்றுவிடும் நிலையில், சகோதரர் முறையில் பழகி வந்த குணசீலன் சிறுமியை பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். காமுக நோக்கத்துடன் பெற்றோர்களிடம் நல்லவன் போல பழகி வந்த கொடூரன், சிறுமி வீட்டில் தனியாக இருக்கையில், முதலில் சில்மிஷம் செய்து படம் பிடித்து வைத்துள்ளான். பின்னர் சிறுமியிடம் உனது புகைப்படத்தை இணையத்தில் ஆபாசமாக பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
சிறுமியை மிரட்டியே பாலியல் துன்புறுத்தல் வழங்கிய நிலையில், சிறுமி பெற்றோரிடம் கூறப்போவதாக அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குணசீலன், உனது தாயாரின் அலைபேசிக்கு ஆபாச புகைப்படத்தை அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதன்பின்னரே சிறுமி பயத்தில் தற்கொலை செய்துள்ளார். சிறுமியின் தற்கொலைக்கு பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சென்ற கொடூரனை காவல் துறையினர் கைது செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
CHENNAI VELACHERY 13 YEAR CHILD SUICIDE POLICE DISCOVERED SUICIDE MYSTERY