வாட்டர் ஹீட்டர் உபயோகம் செய்பவர்களே கவனம்.. பரிதாபமாக பலியான இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை அம்மணி தோட்டம் பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அனிதா (வயது 20). இவர் சவுக்கார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

நேற்று காலை நேரத்தில் அனிதாவின் தாயார் தேநீர் வாங்க கடைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த அனிதா குளிப்பதற்காக பாத்திரத்தில் ஹீட்டரை போட்டுள்ளார். பின்னர் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகிவிட்டதா என்று? தொட்டு பார்த்ததாக தெரியவருகிறது.

இதனால் பெண்மணி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். கடைக்கு சென்று வந்த தாயார், மகள் பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதன்பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஹீட்டரை உபயோகம் செய்யும் நபர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஹீட்டர் ஆனில் இருக்கும் போதே கைகளை தண்ணீரில் வைத்து சோதனை செய்ய கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Vannarpet girl died using water heater


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->