30 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பகிரங்க அத்துமீறல்.. செல்போனில் அதிர்ச்சி பாலியல் வன்முறை வீடியோக்கள்.! - Seithipunal
Seithipunal


திருட்டு வழக்கில் சிக்கிய அறிவழகனின் போனில் ஆபாச வீடியோக்கள் இருக்க, காவல் துறையினர் விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல ஊர்களில் திருடி வாழ்ந்து வந்த காமுகனின் பகீர் பின்னணி.

சென்னையில் உள்ள வடபழனி பகுதியில் அடுத்தடுத்து திருட்டு, வீடு புகுந்து கொள்ளை அடிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. வடபழனி தங்கவேல் காலனி பகுதியில் உள்ள வீட்டில் 2 சவரன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணம், பக்தவத்சலம் காலனி வீட்டில் 10 சவரன் நகை மற்றும் ரூ.1 இலட்சம் பணம், வடபழனி பிள்ளையார்கோவில் தெருவில் 6 கிராம் மோதிரம், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வடபழனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கையில் குற்றவாளியின் அடையாளம் தெரிந்து, அவனின் அலைபேசி எண்ணை வைத்து ஓசூர் அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்தவனை கைது செய்தனர். விசாரணையில், அவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் மாதர அல்லி கிராமத்தை சார்ந்த அறிவழகன் (வயது 32) என்பது தெரியவந்தது. அறிவழகனின் தந்தை ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ ஆவார். அறிவழகன் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் இளங்கலை கணிதவியல் பெற்று, சென்னை மெட்ராஸ் பல்கலை.,யில் எம்.பி.ஏ பயின்றுள்ளார். 

விசாரணையில், கடந்த 2009 ஆம் வருடம் தர்மபுரி பகுதியில் திறந்துள்ள வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய அறிவழகனின் மீது 3 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின்னர், எம்.பி.ஏ படிக்கச் சென்னை வந்து குமரன் நகர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடந்த 2016 ஆம் வருடம் குமரன் நகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், 2017 ஆம் வருடத்தில் கிண்டி காவல் துறையினர் மற்றொரு கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை செய்கையில், அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவனது அலைபேசியில் பல ஆபாச விடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து விசாரிக்கையில், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கும் பெண்கள் வீட்டை குறிவைத்து நோட்டமிட்டு கொள்ளையடித்ததும், தனியாக இருக்கும் பெண்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் அம்பலமானது. 

கொள்ளையடித்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்தால் நகை கொள்ளை போன விஷயத்தை வெளியே பெண்கள் சொல்ல மாட்டார்கள் என்பதால் இவ்வாறு செய்ததாகவும், அவர்கள் மேற்படி நகை கொள்ளை குறித்து மட்டும் புகார் அளிக்காமல் இருக்க, பாலியல் பலாத்காரம் செய்வதை விடியோவாக பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது. கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்த நிலையில், தற்போது வடபழனி காவலர்கள் விசாரணையில் இவன் சிக்கியுள்ளான்.

கடந்த 2019 ஆம் வருடம் சிறையில் இருந்து வெளியாகி சேலம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில், சேலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தது, அங்கிருந்து விடுதலையான பின்னர் அம்பத்தூர் மற்றும் ஆவடி பகுதியில் திறந்துள்ள வீட்டில் திருடி, 2020 ஆம் வருடம் அம்பத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதும் உறுதியானது. வேலூர் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் வேலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான பின்னர் வடபழனிக்கு வந்ததும் தெரியவந்தது.

கடந்த 2017 ஆம் வருடத்தில் அறிவழகன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அதே பாணியில் கொள்ளையை நடத்தியதும், கடந்த 10 வருடத்தில் 150 சவரன் நகைகளை கொள்ளையடித்ததும் உறுதியானது. இவனால் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், கல்லூரியில் படிக்கும் போதே சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ளுதல், அவர்களை தவறாக புகைப்படம் எடுத்து ரசித்தல் போன்றவற்றை வாடிக்கையாக்கியுள்ளான்.

இத்தனை கொடூரத்தை காமுகன் அரங்கேற்றி இருந்தாலும் மானம் கருதி பலரும் வழக்கு கொடுக்கவில்லை. கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒரேயொரு வழக்கு பதிவாக, அவர்கள் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காமுகன் இப்படியான குற்றவாளி என தெரிந்தும், புகார்கள் ஏதும் வராத காரணத்தால் அவனின் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்ய இயலவில்லை என்றும் காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Vadapalani Thief Arivazhakan History Police Said shocking sexual abused videos on Mobile


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->