கியாஸ் சிலிண்டர் கசிவால் சோகம்.. ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்.!
Chennai Triplicane Gas Cylinder Fire Accident Family Crew 3 Injured
திருவெல்லிக்கேணியில் சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சமையல் எரிவாயு விஷயங்களில் பராமரிப்பு வேண்டும்.
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியில் உள்ள தேவராஜன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள் இருந்த அனைவரும் பயத்தில் அலறியுள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயில் சிக்கியவர்களை மீட்ட முயற்சித்துள்ளனர். மேலும், தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை அதிகாரிகள் தீயை அனைத்து வீட்டில் இருந்த 3 பேரை மீட்டுள்ளனர்.
இவர்கள் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், தீ விபத்தில் சிக்கியது அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் அப்துல் ரஹீம் (வயது 58), ரஹீமின் மனைவி பாத்திமா (வயது 52), இவர்களின் மகன் நஹீத் (வயது 22) என்பது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், கியாஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மூவரும் தீயில் சிக்கியது உறுதியானது. தடயவியல் அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தி வரும் நிலையில், விசாரணையின் முடிவில் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கின்றனர்
English Summary
Chennai Triplicane Gas Cylinder Fire Accident Family Crew 3 Injured