அக்கா வாழ்க்கைக்கு வேட்டு வைத்த அன்பு தங்கை..! மாமனுக்கு ஸ்டேஷனில் முறைவாசல் ஏற்பாடு செய்த மனைவி.!!
Chennai TP Chatram Man Married wife Sister Police Arrest as per Wife Complaint
மனைவிக்கு தெரியாமலேயே அவரது இரண்டாவது தங்கையை திருமணம் செய்த கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிகளுக்கு 10 வயதுடைய ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணேஷ் அவரது மனைவியின் சகோதரியான மச்சினிச்சி லோக நாயகியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், உனது தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கணேஷ் பலமுறை மனைவியை வற்புறுத்தி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ரம்யா கடந்த ஜூன் மாதத்தில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இருந்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள கோவிலில் வைத்து, உலக நாயகியை இரண்டாவதாக திருமணம் செய்த கணேஷ், இது குறித்த விஷயத்தை மனைவியிடம் தெரிவித்துவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பதறிப்போன மனைவி ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கணேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai TP Chatram Man Married wife Sister Police Arrest as per Wife Complaint