தந்தைபோல பழகி காமுகனின் கொடூரத்தால் கொலை... 24 வயதில் மன உளைச்சலில் தற்கொலை.!
Chennai Thiruvotriyur Woman Suicide Police Investigation 15 April 2021
சென்னையில் உள்ள திருவெற்றியூர் சத்துமா நகர் பெருமாள் கோவில் பகுதியை சார்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (வயது 24). பட்டதாரி பெண்மணியான பவித்ரா, கடந்த 2019 ஆம் வருடம் இப்பகுதியை சார்ந்த கற்பூர வியாபாரி அம்மன் சேகர் (வயது 60) என்பவரை கழுத்தறுத்து கொலை செய்தார்.
அம்மன் சேகரின் மகளும், பவித்ராவும் தோழியாக பழகி வந்த நிலையில், இந்த பழக்கத்தின் அடிப்படையில் அவ்வப்போது அம்மன் சேகர் இல்லத்திற்கு சென்று வந்த பவித்ராவை காமுகன் அம்மன் சேகர் பாலியல் ரீதியாக மிரட்டியதால், பவித்ரா அவரை கழுத்தறுத்து கொலை செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கைதாகிய பவித்ரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்குள் முன்னதாக ஜாமினில் வெளியான பவித்ரா வீட்டில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
பவித்ராவின் தந்தை பாஸ்கரும் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதனாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிய பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் தொடர்பான தகவல் அறிந்த காவல் துறையினர், பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பவித்ரா தற்கொலைக்கு முன்னதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த கடிதத்தில், சிறை சென்று வந்த மன வருத்தம் மற்றும் தந்தையின் உடல்நிலை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Thiruvotriyur Woman Suicide Police Investigation 15 April 2021