கண்டைனர் லாரியில் விழுந்து தற்கொலை.. சிசிடிவி கேமிராவில் பரபரப்பு காட்சிகள்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவெற்றியூர் கல்யாணச்செட்டி நகர் பகுதியை சார்ந்தவர் வினோத் (வயது 25). வினோத் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை நேரத்தில் அங்குள்ள எல்லையம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றுகொண்டு இருந்தார். 

இதன்போது, எண்ணூர் விரைவு சாலையை கடக்க முயற்சி செய்கையில், கண்டைனர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். இதனால் பயந்துபோன கண்டைனர் ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்துள்ளனர். 

அதில் பதிவான காட்சிகளின் படி, வினோத் சாலைத்தடுப்பு சுவரை தாண்டி வந்து நின்று, அவ்வழியாக வந்த கண்டைனர் லாரியின் நடுப்பகுதியில் தானே படுத்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான வழக்கை திருவெற்றியூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thiruvotriyur Ennore Container Lorry youngster Suicide Police Investigation 17 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->