திருமணமாகாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.. பெற்றோர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருமணம் ஆகாத ஏக்கத்தில் பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள திருவெற்றியூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சார்ந்தவர் முகுந்தன். இவரது இரண்டாவது மகள் மானசா (வயது 25). இவர் எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா பயின்றுள்ளார். தற்போது, தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இவர் மாதம் ரூ.1 இலட்சம் சம்பளம் வாங்கி வந்த நிலையில், இவருக்கு திருமணம் செய்து வைக்கலாம் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர். ஆனால், மானஸாவுக்கு வரன் அமையாமல் இருந்துள்ளது. இதனால் வரன் கைகூடாத ஏக்கத்தில் மானசா இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மானசா, மனத்துடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக திருவெற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மானஸாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thiruvetriyur Woman Manasa Aged 25 Suicide due to Feeling Sad about Marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->