டாப் கியரில் வந்த புள்ளிங்கோஸ்.. விசாரணையில் பகீர் தகவல்..!!
Chennai thief Pullingow arrest by police
கொரட்டூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த புள்ளிங்கோக்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியில் காவல் துறையினர் கொரோனா ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளனர். இந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் அதிவேகமாக வந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் இடைமறித்த காவல் துறையினர், மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவரும் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளிக்கவே, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், இருவரும் செயின் திருடர்கள் என்பதும், திருடிய செயின்களை ஸ்னாப் டீல் இணையம் மூலமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரூ.3 இலட்சம் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai thief Pullingow arrest by police