2 ஆயிரத்தை வாங்கிய மறுநொடியே டாஸ்மாக்கில் முழு குடி.. பசியால் தவித்த மனைவி தூக்கிட்டு தற்கொலை.!
Chennai Tambaram Woman Suicide due to Husband Drinks Full Money Govt Fund Rs 2000
கொரோனா நிவாரண நிதியை கணவர் குடித்தே அழித்ததால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம் சாமியார்தோட்டம் பகுதியை சார்ந்தவர் சமரபுரி. இவர் தையல் தைக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி தீபா. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களில் இவர்களின் குடும்பமும் ஒன்று.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த இரண்டாவது தவணைத்தொகையை சமரபுரி வாங்க சென்றுள்ளார். தீபா வீட்டில் இருந்த நிலையில், கணவர் பணத்தை வாங்கிவிட்டு காய்கறிகளுடன் வருவார் என்று அவர் எதிர்பார்த்து காத்திருந்துள்ளார்.
மாலை நேரத்தில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்த சமரபுரியிடம் பணம் எங்கே? காய்கறிகள் எங்கே? என்று மனைவி கேட்க, சமரபுரி அரசு கொடுத்த ரூ.2 ஆயிரம் பணத்தை முழுவதும் அரசுக்கே கொடுத்துவிட்டதாக தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும், நாங்கள் எப்படி சாப்பிடுவது? காய்கறி இல்லாமல் என்ன சமைப்பது? என்று கேட்ட மனைவியை சமரபுரி அடித்து துன்புறுத்தி போதையில் படுத்து உறங்கியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த தீபா, தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாம்பரம் காவல் துறையினர், தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து சமரபுரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai Tambaram Woman Suicide due to Husband Drinks Full Money Govt Fund Rs 2000