கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்த தந்தை, 2 மகள்கள்.. நொடிப்பொழுதியில் நடந்த பரிதாபம்.. தாம்பரத்தில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையிலுள்ள தாம்பரத்தை அடுத்துள்ள பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 75). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கலா என்ற 40 வயதுடைய மகளும், சுமித்ரா என்ற 25 வயதுடைய மகளும் இருக்கின்றனர்.  

இவரின் மூத்த மகள் கலா திருமணம் முடிந்து, கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் சுமித்ரா மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், ராஜாங்கத்துடன் அவர் இருந்துள்ளார். 

இந்த நிலையில், தந்தை மற்றும் தங்கை பார்ப்பதற்காக கலா சென்னைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜாங்கம் அவரது மகள்கள் சுமித்ரா மற்றும் கலா ஆகிய 3 பேரும், வீட்டில் இருக்கும் சுவர் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். 

இந்த நேரத்தில், சுவர் திடீரென்று இடிந்து விழுந்து 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலமாக குரோம்பேட்டை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜாங்கம் மற்றும் கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐவரும் அதிகாலையில் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Tambaram wall collapase family members 3 person died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->