அதிவேகத்தில் அசுரத்தனமாக சென்ற ஆட்டோ.. பயணிகள் 3 பேர் பலி., ஓட்டுநர் எஸ்கேப்..! - Seithipunal
Seithipunal


வேகமாக சென்ற ஆட்டோ சாலைத்தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். 

சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்திருக்கும் இரும்புலியூர் சிக்னல் அருகே, ஆட்டோ ஒன்று அதிவேகத்தில் பயணம் செய்துள்ளது. இந்த ஆட்டோ முன்னால் சென்று கொண்டு இருந்த பேருந்தின் மீது மோதாமல் இருக்க திரும்பியுள்ளது. 

இதன்போது, ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இலக்கவே, வலதுபக்க சாலைத்தடுப்பில் மோதி பயங்கரமாக விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த கடலூர் மாவட்டத்தை சார்ந்த ஐசக் ராஜ் (வயது 51), காஞ்சிபுரம் உத்திரமேரூரை சார்ந்த சுந்தரராஜன் (வயது 37), பாண்டிச்சேரியை சார்ந்த நாகமுத்து (வயது 36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

மேலும், ஏழுமலை (வயது 65), ரஜினிகாந்த் (வயது 45), ஆனந்தகுமார் (வயது 27) ஆகிய 3 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுனரையும் காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Tambaram Over Speed Auto Accident 3 Died 3 Injured


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->