விபத்தில் கணவன் மரணிக்க, மனைவி எடுத்த விபரீத முடிவு.. கார் ஓட்டுனரால் குடும்பமே அழிந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தாம்பரம் சேலையூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சார்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷா. இவர்கள் இருவருக்கும் பத்து வயதுடைய மகன் மற்றும் ஆறு வயதுடைய மகள் இருக்கின்றனர். 

இவர்கள் நான்கு பேரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி அம்பத்தூரில் பணியை முடித்துவிட்டு மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக மனோஜ்குமார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

இதன்போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தால் மனோஜன் குடும்பத்தினர் மொத்தமாக நிலைகுலைந்த நிலையில், உறவினர்கள் ஆறுதல் கூறியும் மனோஜ் குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளை தேற்ற முடியவில்லை. 

கணவனை இழந்த சோகம் தாங்காது மன உளைச்சலில் இருந்த நிஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து தானும் விஷம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் தாய் இரத்த வாந்தி எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன், தொலைபேசி மூலமாக பெரியப்பாவுக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக அங்கு சென்ற பெரியப்பா அவர்கள் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிஷா உயிரிழந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்வோர் நிதானத்துடன் வாகனத்தை இயக்க தவறும் பட்சத்தில், அது விபத்து முடியாமல் ஒரு குடும்பமே அழிவதற்கு காரணமாக மாறியுள்ளதை வாகன ஓட்டிகள் உணரவேண்டும் என்பதே நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Tambaram man died an Accident Wife Suicide due to Feeling 27 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->