அலட்சியமாக விடப்பட்ட மின்விளக்கு மின்சார கம்பி... சிறுவன் பரிதாப மரணம்.!
Chennai Tambaram Child Death Electric Attack park Light Supply Line
சென்னையில் உள்ள தாம்பரம் சக்தி நகர் பகுதியை சார்ந்தவர் வரதன் (வயது 45). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிஷா (வயது 32). இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்களின் மூத்த மகன் கவுதம் (வயது 8), நேற்று மதியம் பீர்க்கான்காரனை பூங்காவில் விளையாட சென்றுள்ளான். இதன்போது, பூங்காவில் உள்ள மின்விளக்கு மின்சார கம்பி வெளியே தொங்கியபடி இருந்த நிலையில், மின்கம்பியின் மீது கை வைத்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
பூங்காவிற்கு சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அதிர்ச்சியடைந்த தாய் நிஷா, பூங்காவிற்கு தேடி சென்றுள்ளார். இதன்போது, சிறுவன் கம்பியை பிடித்தவாறு இறந்து கிடந்துள்ளான். இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Tambaram Child Death Electric Attack park Light Supply Line