SBI ஏ.டி.எம் பணம் நூதன கொள்ளை விவகாரம்.. கொள்ளைக்கும்பல் தலைவனிடம் 7 நாள் விசாரணைக்கு அனுமதி.!
CHENNAI SBI ATM MONEY CHEATING CASE COURT PERMIT 7 DAY CUSTODY INVESTIGATION
சென்னையில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் இயந்திரங்களில் பணங்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், முதலில் ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் கண்டறியப்பட்ட சம்பவம் அடுத்தடுத்த ஏ.டி.எம் இயந்திரங்களில் உறுதி செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பயனாளர்களின் பணம் மோசடி செய்யப்படாத நிலையில், நூதன முறையினை மேற்கொண்டு ஏ.டி.எம்மில் உள்ள பணத்தை கொள்ளையடித்தது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக சென்னை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடமாநில கும்பல் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது.
இதனால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஹரியானாவில் முதல் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து என 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நான்கு பேரில் இறுதியில் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கொள்ளைக்கும்பல் தலைவன் சவுக்கத் அலியும் கைது செய்யப்பட்டான்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னையை போல பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்மில் நூதன முறையில் பணம் திருடப்பட்டது உறுதியான நிலையில், இறுதியாக சென்னையில் கொள்ளையடித்த சமயத்தில் கூண்டோடு கைதாகியுள்ளனர். இவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வரும் நிலையில், பிற மாநில காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கும் உதவி செய்ய தயாராக இருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொள்ளைக்கும்பலின் தலைவனாக கருதப்படும் சவுக்கத் அலியை 7 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய எழும்பூர் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சவுக்கத் அலியை சென்னை பெரியமேடு காவல் துறையினர் 7 நாள் விசாரணை செய்ய இருக்கின்றனர். இதன் மூலமாக பல திருட்டு சம்பவங்களின் விபரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
CHENNAI SBI ATM MONEY CHEATING CASE COURT PERMIT 7 DAY CUSTODY INVESTIGATION