வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அரங்கேறிய சோகம்.. கேடுகெட்ட புள்ளிங்கோவால் பரிதாபம்.!!
Chennai Rowdy Pullingow make accident Police officer Injuries
சென்னையில் உள்ள அம்பத்தூரில் தொழிற்பேட்டை சி.டி.எச் பகுதியில் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் ஊர்க்காவல் படையினர், வாகன சோதனையில் இன்று காலை ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இந்த நேரத்தில், அவ்வழியாக வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.
இவரை காவல் துறை அதிகாரி சோதிக்க இடைமறிக்கவே, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் ரவி மீது மோதியுள்ளார். இதில், அவர் தூக்கி வீசப்பட்டு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், வாலிபரை காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் காவல் அதிகாரியை மருத்துவமனையில் அனுமதி செய்யவே, போதையில் இருந்த காமுகன் காவல் அதிகாரியை வாகனத்தால் முட்டியது மட்டுமல்லாது, போலீஸ் பூத் கண்காணிப்பு அலுவலக கண்ணாடியையும் உடைத்து பிரச்சனை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் விரைந்து, வாலிபரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவன் வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த ரவுடி கணேசன் என்பது தெரியவந்ததை அடுத்து, கொடூரனின் மீது பல வழக்குப்பதிவுகள் செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Rowdy Pullingow make accident Police officer Injuries