பெண்களை குறிவைத்து சங்கிலி பறிக்கும் திருட்டு புள்ளிங்கோவை விரட்டி பிடித்த காவல்துறை.. காவல் நிலையத்தில் கதறல்.!!
chennai robbery pullingo arrest by police
தமிழகத்தின் சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியில் பெண்ணொருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். இவரை பின்தொடர்ந்து பல்சர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த நபர்களை பெண் நோட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க கயவன் நோட்டமிடுகிறான் என்பதை உணர்ந்த பெண், கழுத்தில் இருந்த சங்கிலியை கையில் எடுத்து வைத்துக்கொள்ளவே, கயவன் சரியாக நோட்டமிட்டு பெண்ணின் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளான்.
இந்த சமயத்தில், நேற்று சூளைமேடு பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இவ்வழியாக வந்த பல்சர் திருட்டு புள்ளிங்கோ, நிற்காமல் சென்றதை அடுத்து, காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர்.
பின்னர் புள்ளிங்கோவை கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், திருமங்கலம் பகுதியில் வழியில் ஈடுபட்ட நபர் என்பதும், இதனைப்போன்று திருமங்கலம் பெண் காவல் அதிகாரியின் நகையையும் வழிப்பறி செய்தது தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாது சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியிலும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. மேலும், இவன் வந்த பல்சர் இரு சக்கர வாகனமும் அயனாவரம் பகுதியில் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இவனிடம் இருந்து தங்க சங்கிலி மற்றும் வாகனத்தை மீட்ட காவல் துறையினர், மற்றொரு கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
chennai robbery pullingo arrest by police