வறுமையால் உறவினரின் வீட்டில் திருட்டு.. மனிதாபிமானம் ஜெயித்தும், அவமானத்தால் எடுத்த முடிவு.!
Chennai Relation House Theft Police Investigation 16 Jan 2021
சென்னையில் உள்ள துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சார்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் மாயமாகியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக குன்றத்தூரில் வசித்து வரும் தாய்மாமா லோகநாதன் (வயது 42) என்பவர் குடும்பத்துடன் ரஞ்சித்தின் இல்லத்திற்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, லோகநாதனை பிடித்து விசாரணை செய்கையில், ரஞ்சித்தின் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், லோகநாதன் தனது தாய்மாமா என்பதால், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும், வறுமை காரணமாக லோகநாதன் திருடியது தெரியவந்த நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவிலும் லோகநாதனின் மீது பிற வழக்குகள் ஏதும் இல்லை என்பதால், எழுதி வாங்கி காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், லோகநாதனின் மனைவி, சொந்த உறவினரின் வீட்டில் நீ திருடியதால், உன்னுடன் வாழ மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு செல்லவே, மனமுடைந்த லோகநாதன் தான் வைத்திருந்த பிளேடை எடுத்து கையை அறுத்துள்ளார். இந்த சம்பவம் காவல் நிலையத்திற்கு உள்ளேயே நடந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, லோகநாதனை மீட்ட காவல் துறையினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர் குடும்பத்தினரை அழைத்து சமாதானம் பேசி, குடும்பத்தினரை சேர்த்து வைத்துள்ளனர். இந்த பரபரப்பு சம்பவத்தால் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Relation House Theft Police Investigation 16 Jan 2021