இரண்டு நாட்களுக்கு தமிழகத்தை புரட்டியெடுக்கப்போகும் மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!
Chennai Regional Meteorological center announce rain for tamilnadu
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வரும் 24 மணிநேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுச்சேரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வரும் 28 மற்றும் 29 ஆம் தேதியில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜூன் 29-ஆம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Regional Meteorological center announce rain for tamilnadu