வடகடலோர மாவட்டங்கள், புதுவையில் மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!
Chennai Regional Meteorological center announce rain
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கோயம்புத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் தலைநகரான சென்னை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பொறுத்தவரையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக மற்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 5 சென்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டம் மேட்டூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, குப்பநத்தம் பகுதியில் தலா 3 சென்டிமீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் சிதம்பரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலா இரண்டு செண்டி மீட்டர் மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டத்தின் தொழுதூர், வேலூர் மாவட்டத்தில் பொன்னை அணைப்பகுதியில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கையாக ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், இங்கு பலத்த காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Regional Meteorological center announce rain