சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு.!!
Chennai Regional Meteorological center announce Rain
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார் பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லார், சின்கோனா பகுதிகளில் தலா ஐந்து சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டத்தின் தேவாலா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூன் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, லட்சத் தீவு கடல் பகுதி, கர்நாடக, கேரள கடல் பகுதி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய தரைக்கடல், வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள குஜராத் கடலோர பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Regional Meteorological center announce Rain