மக்களுக்கு சில்லென அறிவிப்பு வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்.!!
Chennai Regional Meteorological center announce rain
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மூன்று மாவட்டங்களில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Regional Meteorological center announce rain