வதங்கபோகும் சென்னை மக்கள்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!!
Chennai Regional Meteorological center announce heat
தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகலாம் என்றும் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூர் பஜார், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னகல்லார், வால்பாறை, சின்கோனா மற்றும் மதுரை மாவட்டத்தின் புளிப்பட்டி பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஜூன் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் ஜூன் 16 முதல் 20 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Regional Meteorological center announce heat