#வீடியோ: சென்னையில் இடி, பலத்த காற்றுடன் செம்ம மழை... குளுகுளு கொண்டாட்டத்தில் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் பிற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, மற்றும், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், சென்னையில் உள்ள நகர பகுதி மற்றும் புறநகர் பகுதிகள் என பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை, இடி மற்றும் பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். குளுமையான சூழலும் ஏற்பட்டுள்ளதால், கடந்த இரன்டு நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயில் தாக்கம் குறைந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai rain today 28 July 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->