சென்னை: தீவிரவாதியை பாம்பு கடித்தது.. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தீவிரவாதியை பாம்பு கடித்ததால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளான். 

சென்னையில் உள்ள புழல் சிறையில் தீவிரவாதி பிலால் மாலிக் அடைக்கப்பட்டு இருக்கிறான். இவனின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும், பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு வைத்து, பல்வேறு தாக்குதலுக்கு திட்டமிட்டதால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டான். 

இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி பிலால் மாலிக்கை, இன்று சாரைப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. பாம்பை சிறை வளாகத்தில் இருந்த சக கைதிகள் அடித்து கொன்றுவிட்டனர். 

பின்னர், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதி செய்யப்பட்டான். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Puzhal Prisoner Terrorist Bilal Malik Byte by Snake Treatment at Govt Hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->