பெண்கள் குறித்து அவதூறு பதிவு.. யூடியூபர் டாக்சிக் மதனுக்கு சம்மன்.. கைது நடவடிக்கை தீவிரம்.! - Seithipunal
Seithipunal


யூடியூப் தளத்தில் பல்வேறு விதமான ஆபாச பேச்சுக்கள், ஆபாச படங்கள் கொண்ட சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புரட்சி என்ற பெயரில் மத ரீதியாக ஒரு கோஷ்டி சண்டையிட்டு வந்தால், மற்றொரு புறம் பெண்ணியம் என்று காதில் பூ சுத்தி பல வித்தைகளை களமிறக்கும் சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், யூடியூபில் டாக்சிக் மதன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவன் மதன். இவன் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதிகளவு பேசி காணொளிகள் வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பல கண்டனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரின் கவனத்திற்கு இந்த விஷயம் செல்லவே, டாக்சிக் மதன் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை புளியந்தோப்பு காவல் துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர். மேலும், அவனின் யூடியூப் பக்கத்தையும் முடக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவன் விரைவில் கைதாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Pulianthope Police Sampan to You tuber Toxic Madan For Abusing Speech about Woman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->