#Breaking: குப்பைகள் கழிந்துவிட்டது... நாமெல்லாம் முத்துக்கள்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.!
Chennai Premalatha Vijayakanth Pressmeet 11 Jan 2021
சென்னையில் உள்ள கோயம்பேட்டில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " செயற்குழு மற்றும் பொதுக்குழு விரைவில் கூட்டப்பட்டு விரைவில் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு விஜயகாந்திடம் கருத்து கேட்கப்பட்டு, கூட்டணி தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும்.
தேமுதிக முரசு சின்னத்தில் மட்டுமே போட்டியிடும். தமிழகத்தில் அதிமுக, திமுக, தேமுதிக கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது. தேமுதிக நிர்வாகிகள் கழகத்தை விட்டு சென்றால், அவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. தேமுதிகவில் உள்ள குப்பைகள் கழிந்துக்கொண்டு இருக்கிறது. குப்பைகளை களைய உதவி செய்த பிற கட்சிகளுக்கு நன்றிகள்.
அவர்களை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தேமுதிகவின் முத்துக்கள். எங்களுக்கான தொகுதியை நாங்கள் கட்டாயம் கேட்போம். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக யார் அறிவிக்கபோறார்களே, அவர்களே எங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்.. நன்றி.. " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Premalatha Vijayakanth Pressmeet 11 Jan 2021