நாளை சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் "பவர் கட்".!
chennai power cut announcement dec 5
சென்னையில் நாளை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "சென்னையில் நாளை (டிசம்பர் 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருமுடிவாக்கம் பகுதி:-
குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை,
திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம்,
எருமையூர், சோமங்கலம்,
நடுவீரப்பட்டு, வரதாஜபுரம்
பட்டாபிராம் பகுதி:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆவடி, முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்டப் பகுதிகளிலும் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும்: என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chennai power cut announcement dec 5