அருகிலேயே சொந்தங்கள் இருந்தும் பேசாத பரிதாபம்.. 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு.! கண்ணீர் சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மாங்காடு பட்டூர் பகுதியை சார்ந்த பெண்மணி சூர்யா (வயது 37). இவர் பூந்தமல்லி பகுதியில் உள்ள துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் கோவர்த்தினி என்ற வர்தினி (வயது 16). இவர் பூந்தமல்லி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல சூர்யா பணிக்கு சென்றுவிட்ட நிலையில், இரவு பணி முடிந்து வீட்டிற்கு வருகையில் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் மகள் கதவை திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கையில் வர்தினி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக மாங்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று வர்த்தினியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், சூர்யாவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக மனைவியை பிறந்து சென்றுவிட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்த கோவர்த்தினி, தனது தாயாரிடம் வேறு ஒரு இல்லத்திற்கு வீடு மாறி செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த தாய் சூர்யா, மகளை கண்டித்து இருக்கிறார். மேலும், அருகில் ஆதரவாக இருந்த உறவினர்களும் கோவர்த்தினி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேசாமல் இருந்து வந்ததால், தனிமையில் இருப்பது போன்ற பெரும் கொடூர சூழல் ஏற்பட்டு மன உளைச்சலில் கோவர்த்தினி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Poonamallee Mangadu girl Kovarthini Age 16 Suicide due to Family Issue Stress Felled Lonely


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->